மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட, இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் நம்ரதா குமாரி கூறுகையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, 13 மாதிரிகளை பரிசோதனை செய்தோம். அவற்றில் ஒன்று பி.ஏ. 12 வகையையும், மீதமுள்ள 12 மாதிரிகள் BA.2 வகையையும் சேர்ந்தது. BA.12 மாறுபாடு BA.2 ஐ விட 10 மடங்கு ஆபத்தானது. இருப்பினும், கவலைப்படத் தேவையில்லை. அதிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…