புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தற்போது ஆப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்து இத்தாலி போன்ற நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளான கனடா, பிரிட்டன் நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெரும் சிரமங்களுக்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது, எனவே புதிய வகை கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…