Dogfish Shark Off Kerala [Image - Meta AI]
கேரளா : இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) விஞ்ஞானிகள் கேரள கடற்கரையில் புதிய வகை நாய்மீன் சுறாவைக் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவின் சக்திகுலங்கரா மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானி வினேஷ் தலைமையில் இந்திய விலங்கியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர்.
புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ZSI-ன் இயக்குநர் திருத்தி பானர்ஜி தெரிவித்தார். பல்வேறு வகையான நாய்மீன்கள் உள்ளது, அதில் இது ஒரு சிறிய நாய்மீன் சுறா ஆகும். அதன் இறக்கைகள், ஈரல் எண்ணெய் மற்றும் இறைச்சி தேவைப்படுவதால், மீனவர்களால் அவ்வப்போது பிடிக்கப்படுகிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனங்கள் பற்களின் எண்ணிக்கை, உடல் மற்றும் தலை உயரம், இறக்கை அமைப்பு மற்றும் நிறத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்று ZSI இதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குழுத் தலைவரான ZSI விஞ்ஞானி பினேஷ் கேகே கருத்துப்படி, “அரபிக்கடலுக்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாங்கள் சேகரித்த மாதிரிகளில் இருந்து இது நாய்சுறா மீனின் புதிய இனமான ‘ஸ்குவாலஸ் ஹிமா’ (Squalus hima)-வைச் சேர்ந்தது” என கண்டுபிடிக்கப்பட்டது.
ஆழ்கடல் சுறாக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக கடலுக்கு 1,000 மீட்டர் வரை நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட 13 மாதிரிகளின் அடிப்படையில் புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
ஸ்குவாலஸ் ஹிமா பற்றி :
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…