பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை இரவு நேரத்தில் ஒரு தனிப்பட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் ஐதராபாத் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் பெண்கள் பாதுகாப்பிற்கான ஒரு புதிய திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்படும் என்றும், இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்ப வாகனம் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவி எண்கள் 100, 112, 181 ஆகியவற்றில் தொடர்புகொண்டு போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கேட்கலாம் என்றும், பெண் போலீஸ் ஒருவருடன் வாகனத்தில் பெண்கள் அவரவர் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறினார் பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங். இந்த புதிய திட்டம் மக்களால் வரவேற்கப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…