anuragtagur [Imagesource : Wiki]
நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நாட்டில் உள்ள 40 கோடி இளையோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இது இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சமமான அணுகலை வழங்க முயற்சிக்கிறது. இளைஞர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படும் வகையில் புதிய தளம் அமையும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவர்கள் 65 வயதிற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றுள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 65 ஆக உயர்த்தியது மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…