மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ள 24,369 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு, உடனே விண்ணப்பிக்கவும்.!

மத்திய பணியாளர் தேர்வாணையம் 24,369 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் 24,369 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SSC எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக கான்ஸ்டபிள், CAPF(Central Armed Police Force), SSF(Secretariat Security Force), Sepoy in NCB(Narcotics Control Bureau) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைwww.ssc.nic.inஎன்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் படித்து விட்டு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 27.10.2022 முதல் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2022 என அறிவித்துள்ளது.

NCC சான்றிதழ் வைத்திருந்தால் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு,

விண்ணப்பம் தொடங்கிய நாள்27.10.2022

விண்ணப்பத்தின் இறுதி நாள்30.11.2022

வயது வரம்பு18 to 23

கல்வித்தகுதி10th தேர்ச்சி

பணியின் பெயர்                          – பணியிடங்கள்

BSF                                                   – 10,497

CISF                                                  – 100

CRPF                                                  – 8,911

SSB                                                    – 1,284

ITBP                                                   – 1,613

AR                                                      – 1,697

SSF                                                     – 103

NCB                                                    – 164

விண்ணப்பதாரர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னதாக அதிகாரபூர்வ இணையதளமானwww.ssc.nic.inக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.