அக்.1 முதல் புதிய கட்டணம் – ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்த மத்திய அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையில் டூப்ளிகேட் ரகசிய எண் (pin) பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில், மற்ற வங்கிகளில் 3 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

அதற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதுபோன்று தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் தங்கள் கணக்கு உள்ள வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

இதுபோன்று பணப் பரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் போது ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தங்கள் கணக்கு இருக்கும் வங்கிகளில் பணப் பரிவத்தனை இல்லா ஏடிஎம் பயன்பாடுகளுக்கு 5 முறை இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டதுக்கு மேல் சேவையை பயன்படுத்தினால் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்திர ஏ.டி.எம் கார்டு பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி என்றும் பயனர்களுக்கு குறுந்செய்தி அனுப்புவதற்கு ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

6 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

8 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

8 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

10 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

11 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

12 hours ago