அமேசான் நிறுவனம் புதிதாக ஆன்லைன் மருந்து விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்குவது அதிகமாகியுள்ளது. அதனை கணக்கில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல நிறுவனமாக வலம் வரும் அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்கியுள்ளது. அதற்கு முன்னோடியாக கடந்த வாரம் பெங்களூரில் ‘அமேசான் பார்மசி ‘ சேவையை தொடங்கியுள்ளது. இனி இந்தியா முழுவதும் இந்த இந்திய மருந்து விற்பனையை அமேசான் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே முகேஷ் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு போட்டியாக தற்போது ஜெஃப் பெஸாஸின் அமேசான் நிறுவனமும் ஆன்லைன் மருந்து விற்பனை சேவையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த அமேசான் பார்மசியில் உள்ள மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுவதாகவும், பார்மசியில் இந்திய மூலிகை மருந்துகள் உட்பட மருத்துவ சாதனங்களும் வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…