இந்தியாவில் 14 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று!

Published by
Rebekal

இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் தற்பொழுது மீண்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலக அளவில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கமே குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது புதிதாக உருவெடுத்து மேலும் அதிகமான பாதிப்பு கொண்ட நோயை பரப்புகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை விட தற்போது உருவாகியுள்ள புதிய வைரஸ் 70 சதவீதம் அதிகமாக பரவக் கூடியது எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 20 பேர் கொரோனா வைரஸால் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிதாக 14 பேர் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் டெல்லியிலும், 7 பேர் பெங்களூருவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக கொரானா வைரஸ் தொற்றை கொண்டுள்ள நபர்கள் அனைவருமே ஐரோப்பாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 6 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பாதிப்பை கொடுத்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், புதிய கொரோன வைரஸின் தாக்கம் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!

ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!

சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…

15 mins ago

சாலை விபத்தில் சிக்கிய சர்பராஸ் கான் சகோதரர் முஷீர் கான்! நேர்ந்தது என்ன?

மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…

40 mins ago

‘லப்பர் பந்துக்கு’ குவியும் ரிவ்யூ சிக்ஸர்! படம் பார்த்து ஹர்பஜன் சொன்ன விஷயம்?

சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…

2 hours ago

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இந்த 18 மாவட்டங்களில் இன்று கனமழை.!

சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…

2 hours ago

குடும்பத்தை கவர்ந்த ‘மெய்யழகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…

2 hours ago