பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்…தாய்க்கு நெட்டிவ் – அதிர்ச்சியில் பெற்றோர் !

Published by
Hema

வாரணாசியில் புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் பேரதிர்ச்சியில் பெற்றோர்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் கொரோனா 3 வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும் வாரணாசியில் 32 வயதான தொழிலதிபர் அனில் பிரஜாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவரது மனைவி சுப்ரியா மே 24 அன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் ஆர்.டி.-பி.சி.ஆர் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்டன. அதில் சுப்ரியாவிற்கு கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தது.

மேலும் மே 25 அன்று அவர் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், குழந்தை எங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே குழந்தையின் மாதிரி ஆபரேஷன் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டது, அதில் புதிதாக பிறந்த குழந்தையின் கொரோனா சோதனை பாசிட்டிவ் என வந்து எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

இது கவலை அளிப்பதாகவும், தங்களால் பரிசோதனை ரிப்போர்ட்டை நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தை நலமாகவே கொரோனா நெகட்டிவுடன் பிறந்துள்ளது, ஆனால் தற்போது வாராணாசியில் பிறந்த இந்த குழந்தையோ புதுவிதமாக பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Published by
Hema

Recent Posts

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…

27 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…

1 hour ago

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

14 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

16 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

18 hours ago