நீட் பிஜி தேர்வை மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் பிஜி தேர்வு அதிகரித்து வரும் கொரோனாவை மனதில் வைத்து, நீட் பிஜி தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். இப்போது மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று மற்றும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், நீட் பிஜி தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு தேர்வு நடத்தப்படாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு ஒரு மதத்திற்கு முன் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை பயன்படுத்தும் வகையில் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரனோ சிகிச்சை பணியில் 100 நாள்கள் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், லேசான அறிகுறி உள்ள நோயாளிகளை கண்காணிக்கவும் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
NEET PG தேர்வு முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…