நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவரம்! கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கண்டுபிடிப்பு!

Published by
மணிகண்டன்

கடைசியாக நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர். இதன் பேரில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடியினர் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் மருத்துவர் வெங்கடேசனை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மருத்துவர் வெங்கடேசன் என்பவர் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகர் மூலம் இருபது லட்ச ரூபாய் கொடுத்து தன் மகனுக்கு பதிலாக வேறு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரஷீத் என்பவர் நன்கு படிக்கும் மாணவர்களை கொண்டு அவர்களுக்கு பணம் கொடுத்து நீட் தேர்வு எழுத வைத்து வந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டே இம்ரான் எனும் மாணவனுக்கு பதிலாக வேறு ஒரு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி தற்போது அந்த மாணவன் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டார். இம்ரான் ஏற்கனவே மொரீசியசிஸில் மருத்துவம் படித்து,அதை பாதியில் விட்டு இங்கு வந்தவர். தற்போது விஷயம் தெரிந்ததும் மொரீஷியசிற்கு தப்பிவிட்டதாக தெரிகிறது.

மருத்துவர் வெங்கடேஷின் நண்பரான சரவணன் மூலமாகத்தான், ரஷீத் எனும் இடைத்தரகர் பற்றிய விவரம் வெங்கடேஷிற்கு தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர் சரவணன் தனது மகனான பிரவீனையும் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து மருத்துவம் படிக்க சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் இருவரையும் சிபிசிஐடியினர் விசாரிக்க உள்ளனர்.

மேலும், ராகுல், அபிராமி என்பவரும் நீட் தேர்வில் குளறுபடி செய்து மருத்துவம் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோக கடந்த வருடம் நீட் தேர்வில் குளறுபடி செய்து தற்போது மொரிசியஸ் தப்பி சென்றதாக கூறப்படும் இம்ரான் எனும் மாணவனின் தம்பியும் இப்படித்தான் மருத்துவம் சேர்ந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago