டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட NDA கூட்டணி எம்பிக்கள், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், அமித்ஷா, ராஜ்நாத் சிங், குமாரசாமி என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பேசுகையில், 2024 தேர்தல் முடிவுகள் NDA கூட்டணிக்கு வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். இதனை தோல்வி போல சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், நாங்கள் தோற்கவில்லை . தோற்க்கவும் மாட்டோம் என்பது நம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு NDA ஆட்சி தான். கடந்த 10 ஆண்டுகளாக இன்னும் 100ஐ கூட காங்கிரஸால் தொட முடியவில்லை. கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற மொத்த எம்பிகளை விட பாஜக அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
நாடாளுமன்ற விவாதங்களைத் தவறவிடாமல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி NDA கூட்டணி ஆலோசனை கூட்ட நிகழ்வில் பேசிவருகிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…