Categories: இந்தியா

தனுஷ்கோடியில் கடற்படை.. மலை உச்சியில் இந்திய ராணுவம்.! யோகா தின சிறப்பு விடியோ…

Published by
கெளதம்

சர்வதேச யோகா தினம் : 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மலைகளிலும் மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் போர்க்கப்பலில் யோகாசனம் செய்தன.

கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தார். அதை, 177 உலகநாடுகள் ஆதரித்த நிலையில், உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின்  ஸ்ரீநகரில் உள்ள மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி யோகாசனம் செய்ததோடு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில், இன்று இந்திய ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடர்களில் யோகாசனம் செய்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், வீரர்கள் தங்கள் சீருடைகளை முழுமையாக மூடிக்கொண்டு, பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் 10-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பல்வேறு யோகானங்களை செய்தனர். மேலும், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா செய்தார்.

இதனிடையே, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை வீரர்கள் ஐஎன்எஸ் தர்காஷ் மற்றும் ஐஎன்எஸ் டெக் போன்ற போர்க்கப்பல்களில் சூரிய நமஸ்கர் உட்பட பல்வேறு யோகா ஆசனங்களைச் செய்தனர்.

 

10வது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் வகையில், இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவின் மாலுமிகள் இன்று அதிகாலை நடைபெற்ற அந்த யோகாசனத்தில் சில குழந்தைகளும் பங்கேற்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

9 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

11 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

12 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

13 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

14 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

15 hours ago