ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சில மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.அதில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் இருக்கும் என்றும், மேலும் இது தொடர்பான விவரங்கள் அடுத்த சில நாட்களில் தெரிவிக்கப்படும் என பதிவிட்டு உள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…