தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொஹாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), திங்கள்கிழமை அதிகாலை மொஹாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டைக் கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அவரை மொஹாலியின் 6 வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக,சப்-இன்ஸ்பெக்டர் அமன்தீப் சிங் கூறுகையில்,”நமன்வீர் சிங் தனது அறையில் தனியாக இருந்தபோது அதிகாலை 3:35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.பிரார் தனது உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்”,என்று கூறினார்.
மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டிஏவி கல்லூரி, செக்டர் 10, மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரார்,இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை ட்ராப் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் வெண்கலம் வென்றார். அவர் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். சில வருடங்களுக்கு முன்பு. தற்போது, அவர் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…