சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்..! பிரதமர் மோடி வேண்டுகோள்..!

PMModi akilshiksha

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

அதில், நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை நாம் அனைவரும் முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். இதற்காக நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்று கூறினார்.

மேலும், என் மண் என் தேசம் என்ற பேரியக்கம் தொடங்கப்படும் என்று கூறியதோடு, சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்றும் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்