இந்த மசோதாவிற்க்கு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 6 பேர் பலியாகினர். இந்தநிலையில் இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் மகாதீர் முகமது, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், இதேபோன்று ஒரு நடவடிக்கையை நாங்கள் மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். இங்கே குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் இங்கு வந்த சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளோம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூடன் நாங்கள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார். குடியுரிமை விவகாரத்தில் மலேசிய பிரதமரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…