பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது-சிதம்பரம்

Default Image

பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் பிரதமர் மோடி நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது வருகிறார்.இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் மோடி எதிர்க் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது.கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்