நாரதா முறைகேடு…! 4 திரிணாமுல் காங்கிரஸாருக்கு ஜாமீன்…!

Published by
லீனா

நாரதா முறைகேடு விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த 2014ம் ஆண்டில், மேற்குவங்காளத்தில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நாரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது.

இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது. இதனையடுத்து, அவர்களுக்கு சி.பி.ஐ ஜாமீன் அளித்தது.  ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இந்த நிலையில், சி.பி.ஐ. 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த வாரம், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது.

இதனையடுத்து, இன்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை, 4 பேரும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago