தனது பெயரில் வைரலாகி வரும் ஆபாச வீடியோ குறித்து நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்..!

Default Image

நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். நாஞ்சில் மதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தவர். மதிமுக பொதுச்செயலாளரான வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் நாஞ்சில் பெயரில் ஆபாச வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. இதுக்குறித்து நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

“என் எச்சிலை மைய்யாக்கி எழுதியவர்களை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்துருக்கிறேன். ஏனோ தானோ பேர்வளிகள் என்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள் அவர்கள் கருதுவது கை கூடாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் சோதனைகள் வந்தாலும் என் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன். மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு புரிந்தால் செரி” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்