மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். மேலும் நாடு முழுவதும் வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அஞ்சலி செலுத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது நினைவாக வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள டில்லியின் மேயர் ஜெயப்பிரகாஷ் அவர்கள், ரோஜினியில் செக்டர் -17 இல் உள்ள பூங்காவிற்கு வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரது நினைவாக பாசிங் விகாரில் உள்ள ஒரு பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…