நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாகவும், தவறான கணிப்பால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதுபோல மக்களும் தவறாக புரிந்துகொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனங்களில் தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகலாந்தில் தற்பொழுது பதற்றம் நிலவினாலும், சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர்மட்ட விசாரணை நடத்தப்படுகிறது. இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகலாந்தில் இயல்பு நிலையை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…