ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய் – காரணம் இது தானாம்!

Published by
Rebekal

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கான காரணம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் கலந்திருப்பது தான் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு எனும் கிராமத்தினர் திடீரென மயங்கி விழுவதாகவும், வித்தியாசமான சத்தங்களை போடுவதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கான கரணம் என்ன என தெரியாமல் மருத்துவர்கள் மற்றும் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட இந்த நோயால் பலரும் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது வரை இந்த மர்ம நோயால் 350 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நோய்க்கான காரணம் கண்டறிவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களில் ஈயம் மற்றும் நிக்கல் துகள்கள் கலந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும், அகில இந்திய இரசாயன தொழில்நுட்ப கழகம் சார்பில் இதுகுறித்து பரிசோதனைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியதும் தான் இந்த மர்ம நோய்க்கான முழுமையான கரணம் தெரிய வரும்.

Published by
Rebekal

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

12 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

13 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

14 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

14 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago