ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கான காரணம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் கலந்திருப்பது தான் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு எனும் கிராமத்தினர் திடீரென மயங்கி விழுவதாகவும், வித்தியாசமான சத்தங்களை போடுவதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கான கரணம் என்ன என தெரியாமல் மருத்துவர்கள் மற்றும் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட இந்த நோயால் பலரும் பதற்றமடைந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது வரை இந்த மர்ம நோயால் 350 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நோய்க்கான காரணம் கண்டறிவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களில் ஈயம் மற்றும் நிக்கல் துகள்கள் கலந்திருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும், அகில இந்திய இரசாயன தொழில்நுட்ப கழகம் சார்பில் இதுகுறித்து பரிசோதனைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியதும் தான் இந்த மர்ம நோய்க்கான முழுமையான கரணம் தெரிய வரும்.
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…