ஹெல்மெட் அணியாத இளைஞன்..பைக் சாவியை கொண்டு நெற்றியில் குத்திய போலீஸ்.!

Published by
கெளதம்

புதுடில்லியின் உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் ஒரு இளைஞன் பைக் சாவியை கொண்டு நெற்றியில் போலீசாரால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ருத்ராபூர் பகுதியில் திங்கள்கிழமை மாலை அந்த நபர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரை ஹெல்மெட் அணியாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையில் ஒரு வாக்குவாதம் வந்ததை அடுத்து ஒரு போலீஸார் பாதிக்கப்பட்டவரின் பைக்கின் சாவியை வெளியே எடுத்து அந்த நபரின் நெற்றியில் குத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வாகன சோதனைக்காக மூன்று போலீசாரும் சம்பவ இடத்தில் இருந்தனர் என்று கூறப்டுகிறது .

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்த மனிதனின் நெற்றியில் ஒரு சாவி மற்றும் இரத்தம் வெளியேறுவதைக் காணலாம். மேலும் இச்சம்பவம் குறித்து அவர் அருகிலிருந்த மக்கள் அவரிடம் கேட்டதால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த உத்தரகண்ட் காவல்துறையின் நகர ரோந்துப் பிரிவுடன் இணைந்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சம்பவதிற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்களிடையே பதட்டத்தை  ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் காயமடைந்தார். பின்னர்  எம்.எல்.ஏ ராஜ்குமார் துக்ரால் அந்த இடத்தை அடைந்து மக்களை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

40 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

1 hour ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago