என் அம்மா இறந்துவிடுவார்’ – ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டாம்…! போலிஸாரிடம் கெஞ்சும் நபர்…!

Published by
லீனா

தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கை பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களாலும் பலர் உயிரிழந்து வருவது வேதனை அளிக்கக் கூடிய செய்தியாக தற்போது பரவி வருகிறது.

இந்நிலையில்உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அவர்களிடம் எனது அம்மா இறந்து விடுவார் தயவுசெய்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று ஒரு நபர் போலீஸாரிடம் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் பிபிஇ உடையில் ஒரு நபர் மருத்துவமனைக்கு வெளியே நிற்கிறார். அங்கிருந்து அவர்களை சிலர் எடுத்து செல்கின்றனர். அப்போது காவலில் இருந்த போலீசாரிடம் முழு கவச உடையில் நிற்கும் நபர், ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சுகிறார். தயவுசெய்து ஐயா! நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன். நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினரிடம்  உறுதியளித்து தான் நான் இங்கு வந்தேன் என்று முழங்காலில் நின்று கைகூப்பி கெஞ்சுகிறார்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago