எனது கணவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தை நாடிய பெண்.
மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், நாய நகர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த மாதம் எனக்கும், எனது கணவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் அவருக்கு வழுக்கை இருப்பதை மறைத்து, விக் வைத்து ஏமாற்றி விட்டார்.
அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகு தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அப்பெண்ணின் கணவர் தானேவில் உள்ள நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி, மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தனக்கு வழுக்கை இருப்பது குறித்து தான் மாமியாரிடம் கூறியதாகவும், அதற்க்கு அவர் இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை எனக் கூறியதாகவும், அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அப்பெண் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், 4998,406, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தானே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசில் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மூத்த காவல் ஆய்வாளர் கைலாஷ் இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…