இன்று தனது வீடு இடிக்கப்பட்டது போல, நாளை மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமே நொறுங்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநில அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அவருக்கும் அம்மாநில அரசு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி இடிக்கப்பட்டது. தற்பொழுது அவரின் கட்டடங்களை இடிக்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பணிகள் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கங்கனா ரனாவத், இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. நாளை மகாராஷ்ட்ர முதல்வரின் ஆவணமே நொறுங்கும் என தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திரைப்பட மாபியா கும்பல்களுடன் இணைந்து னது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது, நாளை உங்களின் ஆவணமே நொறுங்கும் எனவும், காலச்சக்கரம் மாறிக்கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…