Pragyan Rover [Image source : X/@chandrayaan_3]
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 27ம் தேதி விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோடில் இருந்து பெறப்பட்ட, சந்திரனின் மேற்பரப்பு அல்லது மேற்பரப்புக்கு அருகில் உள்ள வெப்பநிலை மாறுபாட்டிற்கான அளவீட்டை இஸ்ரோ வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் ஆனது ஒரு சிறிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், “வணக்கம் மண்ணுலகம்! இது சந்திரயான் 3 இன் பிரக்யான் ரோவர். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சந்திரனின் இரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நலமாக இருக்கிறோம். சிறந்த தகவல்கள் விரைவில் வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…