முதல்வர் நிவாரண நிதிக்கு ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கிய மூதாட்டி.!

Default Image

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கவும்  , ஏழை எளிய மக்களுக்கு உதவவும்  மக்கள் நிதியளிக்க வேண்டும் என  அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் முதலமைச்சர் சவுகான்  கோரிக்கை ஏற்று பலர் தங்களால் முயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் சல்மா உஸ்கர்( 82) என்பவர் தன் ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம்  வழங்கியுள்ளார்.

இதையெடுத்து  டுவிட்டரில் முதல்வர் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில் ”உங்களை போன்ற தாய்மார்களின் ஆசியால், கொரோனா வைரஸ் தாக்குதலை அடியோடு ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்