பைக் கொடுக்காததால் திருமணம் முடிந்த ஒரே நாளில் முத்தலாக் கூறிய கணவர்!

Default Image

உத்திரபிரதேசத்தில் மாநிலம் ஜகான்ஹிராபாத் பகுதியை சார்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்சனா பனோ என்பவரை கடந்த 13-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன் ருக்சனா பனோ குடும்பத்தினர் இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறினார்.

ஆனால் திருமணம் ஆகியும் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த ருக்சனா பனோ தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்திற்கு கீழ் ஆலம் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.இவரின் புகாரை ஏற்று கொண்ட போலீசார் விசாரித்த பின்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்