கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!

Published by
மணிகண்டன்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார்.  அவர் நேற்று (திங்கள்) வடக்கு கோவாவிற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவர் அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சுசனா சேத் விடுதிக்கு வரும் போது உடன் இருந்த அவரது மகன், திரும்பி செல்கையில் இல்லை என்பதை விடுதி ஊழியர்கள்கண்டறிந்துள்ளனர் . அதன் பின்னர் காவல்துறைக்கு சந்தேகத்தின் பெயரில் புகாரளித்துள்ளனர். அதற்கு முன்னர், கோவாயில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தியபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் போலீசார் சுசனா சேத்தை தொடர்பு கொண்டு 4 வயது மகன் பற்றி கேட்கையில், தனது மகன் , நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் சுசனா சேத் கூறிய முகவரி மற்றும் தகவல் என்பது போலி என விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா காவல் நிலையத்தில் வைத்து சுசனா சேத்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் , சுசனா சேத் உடமைகளை சோதனை செய்த போது அதில் சூட்கேசில் அவரது 4 வயது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கோவா விடுதியில் அவர் தங்கி இருந்த அறையில் ரத்த கரை படிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதற்காக, எப்போது  தனது 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்தார், அவர் தான் கொலை செய்தாரா.? என்ன நடந்தது என்பது பற்றி காவல்துறையினர் சுசனா சேத்திடம் கர்நாடகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

3 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

5 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

6 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

8 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

9 hours ago