கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!

Published by
மணிகண்டன்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார்.  அவர் நேற்று (திங்கள்) வடக்கு கோவாவிற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவர் அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சுசனா சேத் விடுதிக்கு வரும் போது உடன் இருந்த அவரது மகன், திரும்பி செல்கையில் இல்லை என்பதை விடுதி ஊழியர்கள்கண்டறிந்துள்ளனர் . அதன் பின்னர் காவல்துறைக்கு சந்தேகத்தின் பெயரில் புகாரளித்துள்ளனர். அதற்கு முன்னர், கோவாயில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தியபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் போலீசார் சுசனா சேத்தை தொடர்பு கொண்டு 4 வயது மகன் பற்றி கேட்கையில், தனது மகன் , நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் சுசனா சேத் கூறிய முகவரி மற்றும் தகவல் என்பது போலி என விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா காவல் நிலையத்தில் வைத்து சுசனா சேத்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் , சுசனா சேத் உடமைகளை சோதனை செய்த போது அதில் சூட்கேசில் அவரது 4 வயது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கோவா விடுதியில் அவர் தங்கி இருந்த அறையில் ரத்த கரை படிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதற்காக, எப்போது  தனது 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்தார், அவர் தான் கொலை செய்தாரா.? என்ன நடந்தது என்பது பற்றி காவல்துறையினர் சுசனா சேத்திடம் கர்நாடகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

3 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

3 hours ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

8 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

9 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

10 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

10 hours ago