Categories: இந்தியா

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளி..!

Published by
லீனா

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள்.

மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார்.

பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் நீதிமன்ற விசாரணையை தவிர்த்து விட்டதால் அவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

இந்நிலையில் விசாரணையில் மது சிறிதுகாலம் பாட்னாவிலும், பின்னர் பூனேவிலும் வசித்து வந்துள்ளார். சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான பெயர்களை பயன்படுத்தி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன்பதாக அவரது நண்பரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். அங்கு இருவரும்பீன்யா அருகே உள்ள மாலுக்கு சென்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அதை மதுவின் நண்பர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆடுகோடி போலீசாரை தொடர்பு கொண்டு மதுவின் புகைப்படம் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த புகைப்படத்தை சரிபார்த்து பீன்யா அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அறிந்து அதை வெளியிட்ட மதுவின் நண்பரை அடையாளம் கண்டுள்ளனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மது கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

8 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

56 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

3 hours ago