ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில், சிபிஐ தரப்பானது, ‘ ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது.’ என கோரிக்கை வைத்தது.
ஆனால், சிபிஐ-யின் இந்த வாதத்தை நீதிபதி ஓ.என்.சைனி நிராகரித்து இருந்தார். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘ இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிணை தொகையாக 1 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. ‘ இதன் மூலம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்க துறை கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரத்தை கைது விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…