11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் இதே மாலை வேளையில் தான் லஷ்கர் – இ – தொய்பா தீவிவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் அந்த கோரச் சம்பவம் நடைபெற்றது. மும்பையில் ஆள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. ரயில் நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கு 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 120 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்ததாக மும்பையில் பிரபலமாக இருக்கும் நாரிமன் இல்லம், லெபர்ட் காஃபோவில் தாக்குதல் நடைபெற்றது. அங்கு நான்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 25 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
அடுத்த இடம் தற்போது வரை நினைவிருக்கும் மும்பையின் நட்சத்திர ஹோட்டல்களான தாஜ் ஹோட்டல் மற்றும் ஓரியண்ட் ஹோட்டல் என இந்த ஹோட்டலில் பல வெளிநாட்டவர் தங்கியிருந்தனர். அந்த சமயம் தீவிரவாதிகள் உட்புகுந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். மூன்று நாட்கள் பிணைக்கைதிகளாக தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தனர். மூன்று நாட்களாக நமது ராணுவம் போராடி மீட்டனர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அஜ்மல் கசாப் போன்ற முக்கிய தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு பிணைக்கைதிகள் இருந்தவர்களை ராணுவத்தினர் மீட்டனர்.
இந்த மும்பை தாக்குதலில் சுமார் மொத்தம் 160 பேர் பலியாகி இருந்தனர். இதில் பொதுமக்கள் வெளிநாட்டவர் காவல்துறையினர் ராணுவத்தினர் என பலர் பலியாகி இருந்தனர் .இந்த சம்பவம் தற்போது நினைத்தால் கூட மனதை பதறவைக்கும் சம்பவமாக இருக்கிறது. இன்றோடு அந்த தாக்குதல் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், என்றும் மாறவாத வடுவாக நம் நெஞ்சங்களில் இருக்கிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…