இந்தியாவில் முதன் முதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
மக்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல நகரமான மும்பை மாவட்டத்தில் 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டில் முதன் முதலாக 1 கோடி தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை அடைந்துள்ளது மும்பை.
மும்பையில் இதுவரை 507 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 1,00,63,497 பேருக்கு கொரோனா தடுப்பூசி மும்பையில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 72,75,134 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 27,88,363 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…