மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மும்பை துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 25 கிலோ போதைப் பொருளை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மும்பையில் உள்ள நஹவஷேவா துறைமுகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் 125 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொழில் அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…