அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுக்க முயற்சிக்கும் மும்பை போலீஸ்!

Default Image

அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதன்காரணமாக 2018 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்த நிலையில், சுஷாந்த் சிங் மற்றும் டி.ஆர்.பி. வழக்குகளை முன்வைத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை கைது செய்தனர்.

மேலும் அர்னாப், போலீசார் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வலுக்கட்டாயமாக தன்னை இழுத்து சென்றதாகவும் புகாரளித்துள்ளார். இந்தநிலையில் மும்பை போலீசார், அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்