மும்பை விளம்பரப்பலகை விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு.!

சென்னை: மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பம்ப் மீது 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடிமைத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த விளம்பர பலகை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.
நேற்று வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் மாலையில் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல், உள்ளூர் ரயில்களின் சேவைகள் தாமதமானது, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025