கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் – விசாரிக்க சிறப்பு குழு..!

Published by
Edison

மும்பையில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் செலுத்திய மோசடி விவகாரம் தொடர்பாக  விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையின் சில பகுதிகளில் மே 25 முதல் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில்,போலியான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும்,மருந்துக் குப்பிகளின் மூடிகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட மக்கள்,அதுகுறித்து சந்தேகம் அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து,மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால்,அதைப் பயன்படுத்தி சிலர்,அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முகாம்களை நடத்தியுள்ளனர்.மேலும்,தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஏற்கனவே பயன்படுத்திய தடுப்பூசி மருந்து குப்பிகளை பெற்று அதில் உப்புத் தண்ணீரை நிரப்பி சுமார் 2 ஆயிரம் பேருக்கு செலுத்தியுள்ளனர். இதன்மூலமாக ரூ.12.40 தொகையை கட்டணமாக பெற்றுள்ளனர் என்பது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும்,தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி போலியான சான்றிதழ்களையும் தயாரித்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து,இந்த மோசடியில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து,அவர்களின் மீது ஆள்மாற்றட்டம்,கலப்படம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

மேலும்,இதுகுறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை மும்பை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago