சிஎஸ்கே கேப்டன் தோனி பப்ஜி விளையாட்டை அதிகம் விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி வீடியோ கேம் விளையாட்டுகளை அதிகம் விரும்புவதாகவும் குறிப்பாக பப்ஜி விளையாட்டை விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டிற்கு தோனி அடிமையாகிவிட்டதாகவும், அந்த விளையாட்டுடனே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே தொடர்பான உரையாடலின் பொழுது சாக்ஷி, தனது கணவர் எப்போதும் சுறுசுறுப்பான மனதை வைத்திருப்பதாகவும், அது நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
உங்களுக்கே தெரியும் மஹிக்கு அதிகமாக சிந்திக்கக்கூடிய மூளை. அது எப்போதும் ஓய்வெடுக்காது. அதனால் அவர் கால் ஆப் டியூட்டி அல்லது பப்ஜி போன்ற விளையாட்டுகளை அதிகம் விளையாடுகிறார். இது இவரது மனதை திசைதிருப்ப உதவுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த பப்ஜி விளையாட்டு தோனி படுக்கையறைக்கு அழைத்துவந்துவிட்டார். அவர் என்னுடன் பேசுகிறார் என்று நினைப்பேன், ஆனால் அவர் ஹெட்போன்களில் விளையாடும் மற்ற நபர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
தூங்கும் போதும் பப்ஜியை பற்றி நினைத்து கொண்டு தூங்குவதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த இடைநிறுத்தப்பட்ட இந்த சீசன் ஐபிஎல் 2021 மீண்டும் தொடங்கும் பொழுது சிஎஸ்கேவை தோனி முன்னிலைப்படுத்துவார் என்றும் இம்முறை சென்னை அணி நல்ல வடிவத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…