குடியுரிமை சட்டத்திற்க்கு வாய்ப்பே இல்லை… ம,பி முதல்வர் அதிரடி அறிவிப்பு…

Published by
Kaliraj
  • தேசிய குடியுரிமை திருத்த விவகாரம் எதிரொலி.
  • காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத மாநிலத்தில்  தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட மாட்டோம்  என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்பதை தெளிவுபடுத்திப் பேசிய அம்மாநில முதல்வர் கமல்நாத், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது  பன்முகத்தன்மை கலாசாரத்தினால் உலகளவில் இந்தியா அறியப்படுகிறது. ஆனால், என்ஆர்சி என்பது இந்தியாவின் இந்தத் தனித்துவங்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலாகும். நான்  40 ஆண்டுகளாக அரசியலில் எம்எல்ஏ-வாக உள்ளேன். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதலைத் தொடுக்கும்  சட்டங்களை நான் பார்த்ததே கிடையாது. தற்போது நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வேலைகளை இழக்கின்றனர். விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற  விலை கிடைப்பதில்லை. ஆனால், மத்திய அரசு இதில் கவனம் செலுத்தாமல், மக்களின் கவனத்தை என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீது திருப்புகிறது.  என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவையே தெரிவிக்கிறது. ஆனால், அதை என்ஆர்சியுடன் இணைக்கக் கூடாது” என்றார்.  மேலும், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்குப் பதிலளித்த முதல்வர் கமல்நாத், “மோடி எங்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா? என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்துத் திட்டங்களும், உள்நோக்கமும் எங்களுக்கும்  தெரியும்” என்றார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

30 minutes ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

34 minutes ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

57 minutes ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

1 hour ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 hours ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 hours ago