2 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயற்சி செய்த தாய்..!

Default Image

ஆந்திராவில் இரண்டு வயது குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அக்குழந்தையின் தாய்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு(35), இவரது மனைவி மீனாட்சி(29). இவர்களின் குழந்தைகள் தனுஸ்ரீ(6), பிரணீதா(2). குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை ஸ்ரீனிவாசலு வேலைக்காக சென்றுள்ளார். மூத்த மகள் தனுஸ்ரீ தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். தாயும் இரண்டு வயது குழந்தை மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அப்போது மீனாட்சி தனது குழந்தையின் கையை அறுத்துவிட்டு, அவரது கையையும் அறுத்துள்ளார். பின்னர் மீனாட்சி தற்கொலை செய்வதற்காக தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து வீடு வெகுநேரமாக கதவு மூடியிருப்பதால் அருகில் உள்ளவர்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மீனாட்சி உயிருடன் இருந்துள்ளார், உடனடியாக காவல்துறைக்கு தகவல் செய்துள்ளனர். ஆனால், கவலைக்கிடமாக 2 வயது பிரணீதா இறந்து கிடந்துள்ளார்.

பிறகு அனந்தபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சை பெற்று அவரது உடல் சீராகியுள்ளது. இந்நிலையில் 2 வயது மகளை கொன்றதற்காகவும், தற்கொலைக்கு முயன்றதாலும் மீனாட்சி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்