மகனை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரிய தாய்…! மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்…!

Published by
லீனா

மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம். 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதபெள்ளி மண்டலில் உள்ள பிர்ஜெபள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு, அரிய வகை இரத்த  நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். அவர்களது மகனுக்கு பெயர் ஹர்ஷ்வர்தன் (9).

ஹர்ஷவர்தனுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​ஏழை தம்பதியினர் தங்கள் மகனுக்கு ரத்தம் தொடர்பான ஒரு அரிய வகை நோய் இருப்பதை அறிந்து கொண்டனர். அந்த சிறுவனுக்கு பல சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அந்த ஏழை தம்பதியினர் ரூ.4 லட்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், அந்த சிறுவனின் தாய் அருணா, புங்கனூர் நீதிமன்றத்தில் தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், அரசாங்கம் தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவரது கருணைக் கொலைக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மனுவைத் தாக்கல் செய்த இரண்டு மணி நேரத்திற்குள், சிறுவன் நீதிமன்றத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

9 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

11 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

11 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

13 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

14 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

15 hours ago