வீட்டுக்குள் இருந்த 4 வயது சிறுமியை கடந்த முயன்றவர்களிடமிருந்து குழந்தையை காத்த தாயின் வீரம், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் எனும் பகுதியில் தனது சகோதரி வீட்டிற்கே சென்று பணம் பறிப்பதற்காக சகோதரர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதாவது சகோதரியின் 4 வயது சிறுமியை கடத்தி 30 முதல் 35 லட்சம் வரை பணம் பறிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் வீட்டுக்குள் இருக்கும் பொழுது தண்ணீர் கேட்பது போல கேட்டு விட்டு, அவர் உள்ளே சென்றவுடன் குழந்தையை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் குழந்தையின் தாய் தைரியமாக தனது குழந்தையை வேகமாக பிடுங்கி எடுத்து விட்டார்கள். கடத்த வந்தவர்கள் ஒன்றுமறியாதவர்கள் போல செல்ல முயன்றபோது அருகில் இருந்தவர்கள் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பொழுது குழந்தையின் மாமன் தான் தனது மருமகளை கடத்தி பணம் பறிப்பதற்காக இந்த செயலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் மேல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…