மும்பை செல்லும் தனது கனவை நினைவாக்க பெற்ற குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்ற தாய் கைது!

Published by
Rebekal

தன் கனவை நனவாக்க இரண்டு மாதங்களே ஆன குழந்தையை 45,000  ரூபாய்க்கு விற்க முயன்ற பெண்மணி கைது.

ஹைதராபாத்தில் உள்ள ஹபீப் நகர் எனும் காவல்நிலையத்தில் பெற்ற ஒரு குழந்தையை பெண்மணி விற்பனை செய்ய போவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவலர்கள் விரைந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஹைதராபாத்தில் உள்ள 22 வயதான பெண் ஒருவர் தான் பெற்று இரண்டு மாதங்களே ஆன மகனை மும்பை செல்லக்கூடிய தனது கனவை நனவாக்குவதற்கு 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், நீண்ட காலமாக மும்பைக்கு செல்ல விரும்பிய அவர் குழந்தையை தனியாக வளர்ப்பதில் சிரமங்களை சந்தித்திருக்கிறார். செவ்வாய்கிழமை அன்று அக்குழந்தையின் தந்தை அப்துல் மஜீத் என்பவர் தனது மனைவி மகனை விற்க முயற்சிக்கிறார் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சிறுவனை 45,000 க்கு வாங்க முயன்ற குடும்பத்தினர் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவனை காவல்துறையினர் அவனின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

46 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

1 hour ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago