கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 9 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று!

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு போடப்பட்டு வந்தாலும், புதியதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 1,08,80,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,05,89,230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் தவிர 1,55,447 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் 9,309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 1,35,926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk