நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நெருக்கடிக் காலகட்டத்தில் கூட முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் இந்த கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்த இரண்டாம் அலையில் அதிக அளவில் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது வரை கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 613 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்திரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 31 மருத்துவர்களும், ஆந்திர பிரதேசத்தில் 29 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 29 மருத்துவர்களும், மேற்குவங்கத்தில் 19 மருத்துவர்களும், ஜார்கண்டில் 29 மருத்துவர்களும், தமிழகத்தில் 18 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதனை தவிர்த்து அசாமில் 6, சதீஷ்கர் 3, ஹரியானா 2, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 3 கர்நாடகா 8, கேரளா 4, மத்திய பிரதேசம் 13, மகாராஷ்டிரா 15, ஒடிசா 16, பாண்டிச்சேரி 1, பஞ்சாப் 1, திரிபுரா 2, உத்தரகாண்ட் 2 மேலும் ஒரு மாநிலத்தில் 1 மருத்துவர் என மொத்தம் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதோ உயிரிழந்த மருத்துவர்களின் பட்டியல் அட்டவணை,
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…