இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாட்சப் கணக்குகள் முடக்கம்..! ஏன் தெரியுமா…?

Default Image

இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைகள் இந்த ஆண்டு மே 26 அன்று நடைமுறைக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள சமூக ஊடகங்கள், தங்களது மாதாந்திர அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில் தளத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப் தாக்கல் செய்த அறிக்கையில், கணக்குகளை முடக்கக் கோரியும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தக் கோரியும்  594 புகார்கள் வந்தன. இந்த புகார்கள் வந்த காலத்திலேயே 74 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும், இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் அனைத்தும் +91 என்ற செல்போன் எண்ணில் தொடங்கும். அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாகவே 95 சதவீதக் கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்ட பின் அந்த கணக்கில் உள்ள உரிமையாளர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்தை தொடர்பு கொண்டு மீண்டும் தங்கள் கணக்கை மீட்க முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்