கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் டி என் சுரேஷ் அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாநிலத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் அதிகபட்சமாக சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பத்து நாளில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதால் பாதிப்பு 7.56 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…