கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் டி என் சுரேஷ் அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாநிலத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் அதிகபட்சமாக சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பத்து நாளில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதால் பாதிப்பு 7.56 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…